Posts

ஊருக்கை ஒருகதை - சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்

Image
யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் 'தீம்புனல்" வாரந்த பத்திரிகையில் 'ஊருக்கை ஒருகதை" எனும் தலைப்பில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஊர்க்கதைகளில் 01.05.2021 அன்றைய நாளில் வெளியான 'சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்".   சவம் காத்த சண்டியன் சண்முகத்தான் முந்தியெல்லாம் ஊருக்குள்ளை ஒரு செத்தவீடு நடந்தால் போதும் செத்தவீட்டு வேலைவெட்டியளைச் செய்யிறதுக்கு இளவட்டங்கள் முண்டியடித்து வந்து நிக்குங்கள். தோரணம் கட்டிறது துவக்கம் சவம் எரிக்கிறது வரைக்கும் எல்லா வேலையளையும் பொறுப்பெடுக்க இளம் பொடியள் வந்து நிற்பாங்கள். இண்டைக்கு அது குறைஞ்சுபோச்சுத்தான். அப்ப எண்டாலும் சரி இப்ப எண்டாலும்  சரி அந்த வேலையளுக்குப் பின்னாலை ஒரு 'முசுப்பாத்தியும்" இருக்கெண்டு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்தானே!  இண்டைக்கு அந்த 'முசுப்பாத்தியள்" அளவுக்கு மிஞ்சிப்போச்சு. கோர்வை கோர்வையா வெடி கொழுத்திறது 'கேஸ்" கணக்கிலை சோடா உடைக்கிறது 'பாண்ட்" வாத்தியம் பிடிச்சு முழங்கித்தள்ளிறது எண்டு கனக்க இருக்கு. அதிலை தவிர்கேலாத ஒண்டுதான் சுடலைக்கு 'பரல்

'ஊருக்கை ஒருகதை" - 'யானை திரத்தின கூளைக் கணபதி"

Image
யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் 'தீம்புனல்" வாரந்த பத்திரிகையில் 'ஊருக்கை ஒருகதை" எனும் தலைப்பில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஊர்க்கதைகளில் 22.05.2021 அன்றைய நாளில் வெளியான 'யானை திரத்தின கூளைக் கணபதி".    'ஊருக்கை ஒருகதை" - 'யானை திரத்தின கூளைக் கணபதி" • உங்களுக்கும் தெரியும்தானே வேலையில்லாமல் இருக்கிற ஆக்களுக்கு காணித்துண்டு குடுக்கினமாம். இளம் பொடியள், பெட்டையள் எல்லாரையும் கூப்பிட்டு 'இன்ரர்வியூ" வைக்கினமாம். காடுகளைத் திருத்தி களனியளாக்கப் போயினமாம். பாவனையற்றுக் கிடக்கிற காணிகளிலை முதலீட்டைக் கூட்டி நாட்டிலை தொழில்வாய்ப்புகளை பெருக்கப் போயினமாம். உந்த வேலை ஏன் நடக்குதெண்டு மற்றப்பக்கத்திலை வேறை கதையளும் இருக்கு! காகத்தின்ரை கூட்டுக்குள்ளை குயில் முட்டையிடுறதை சட்டரீதியாக்கினால் காகம் குயிலைத் திரத்திக் குட்டேலாதுதானே! அதுக்குப்பிறகு காகத்துக்கும் குயிலுக்குமிடையிலை நல்லிணக்கம் வந்திடும் எண்ட கதையளும் இருக்குத் தெரியுமோ?  உந்தக் காணித்துண்டுகள் குடுக்கிற நாடகம் நடக்கிற நேரத்திலை அடிக்கடி 'யானை திரத்தின கூளைக
Image
 கிராமத்து மனிதர்கள் என்ற இந்தத் தொடர் தனித்துவமான கிராமத்து மனிதர்களை மீள நினைவுபடுத்துவதன் மூலமாக அருகிப்போன கிராமத்து வாழ்வின் செழுமைகளையும் விகற்பங்களையும் வெளிக்கொண்டுவருகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'உதயன்" நாளிதழின் வாராந்த வெளியீடான 'சஞ்சீவி"யில் தொடர்ச்சியாக 20 வாரங்கள் 'கிராமத்து மனிதர்கள்" எனும் தலைப்புடன் வெளியான கதைகள் இங்கு மீள்பதிவாகின்றன. 'இராகன்" எனும் புனைபெயரில் இவை பத்திரிகையில் எழுதப்பட்டவை.   கிராமத்து மனிதர்கள்.... 02 கலைநேசன் ஞானலிங்கம்                                                                                                                                         இராகன் தூய்மையும் சீர்மையும் மனிதவாழ்வின் வனப்புக்கு இன்றியமையாதது. மனிதர்கள் முதலில் தங்கள் ஒவ்வொருவரின் சீர்மையையும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். வீட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாது யாரும் இருப்பதில்லை. அது அத்தியாவசியங்களில் ஒன்று. சிலரது வீடுகளில் வீட்டுக்குள்ளே அலங்கரிக்கும் தேவைக்காக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும், வ
Image
 கிராமத்து மனிதர்கள் என்ற இந்தத் தொடர் தனித்துவமான கிராமத்து மனிதர்களை மீள நினைவுபடுத்துவதன் மூலமாக அருகிப்போன கிராமத்து வாழ்வின் செழுமைகளையும் விகற்பங்களையும் வெளிக்கொண்டுவருகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்துகொண்டிருக்கும் 'உதயன்" நாளிதழின் வாராந்த வெளியீடான 'சஞ்சீவி"யில் தொடர்ச்சியாக 20 வாரங்கள் 'கிராமத்து மனிதர்கள்" எனும் தலைப்புடன் வெளியான கதைகள் இங்கு மீள்பதிவாகின்றன. 'இராகன்" எனும் புனைபெயரில் இவை பத்திரிகையில் எழுதப்பட்டவை.  கிராமத்து மனிதர்கள்....  பெண்டுகள் கந்தியான் கந்தவனம்                                                                                                                                        'இராகன்" காலம் தப்பிய மழை வரும் காலங்களிலெல்லாம் 'பெண்டுகள் கந்தியானை"த்தான் நினைவுகளில் மீட்டுக்கொள்வார்கள் எம் ஊரவர்கள். வயல்கள் விளைந்து நிறைமாதக் கர்ப்பிணியாய் கொத்துக்கொத்தான கதிர்களைத் தாங்கிச்சுமந்து அசைந்து நிற்கும்போது எப்போதாவது எதிர்பாரத விதமாக காலந்தப்பிய மழைமேகம் வழிப்பறிக் கொள்ளையர்போல திடீரென வந்த